சென்னை:

மிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை தரப்பில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

தமிகத்தில் கடந்த சில ஆண்டுகளாக  பருவமழை பொய்த்ததால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான ஃபானி புயல்  தமிழகத்தில் மழையை கொட்டும், இதனால் தண்ணீர் பிரச்சினை சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயற்கையும் நம்மை ஏமாற்றி சென்றுவிட்ட நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, மழை வேண்டிய யாகம் செய்யுங்கள் என்று  அறநிலையத்துறை அதிகாரி களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.