சென்னை: 400KV (4,00,000 Volts) மின்சாரத்தை Off செய்யாமல் தகுந்த கவச உடையுடன் உயர்மின் கோபுரத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உயர் மின்கோபுரங்கள் உள்ளது. இந்த உயர் மின்கோபுரங்கள் வழியாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்று அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரம் ஒன்றில், ஏற்பட்ட பழுதினை, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டிக்காமலே பணியாற்றி, பழுதை சரி செய்துள்ளனர்.

சுமார் 400 கிலோ வாட்ஸ் மின்சாரம் செல்லும் அந்த மின்பாதையின், மின் இணைப்பை துண்டிக்காமல், மின்வாரிய ஊழியர்கள், தகுந்த கவச உடையுடன், ஏணி உதவியுடன் பழுதை சரி செய்த காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.