சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மேலும் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரியுடன் இணைந்து பணியாற்றும் வகையில், மேலும் 2 இணை தலைமைத்தேர்தல் அதிகாரிகளை தமிழகஅரசு நியமித்து உள்ளது.

அதன்படி, வேளாண்துறை இணைச் செயலாளராக இருந்த ஆனந்த் ஐஏஎஸ்,  சுகாதாரத்துறை இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் ஆக்யோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.