சென்னை:
மிழக மக்களின் பயன்பாட்டுக்காக 200 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை, தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 200 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், ஒரு கோடியே 46 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 25 ஜீப்புகளையும்  போக்குவரத்து துறை அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
சென்னையில் உள்ள முதல்வர் ஜெயலலிதா தொகுதியான,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து  3 மகளிர் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 118 பேருந்துகள் மற்றும்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 11 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 4 பேருந்துகள்,  கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 16 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 பேருந்துகள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37 பேருந்துகள், என மொத்தம் 45 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 200 புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், பூந்தமல்லி, செங்கல்பட்டு, திண்டிவனம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் வடக்கு, பொள்ளாச்சி, ஊட்டி, கரூர், புதுக்கோட்டை, மதுரை வடக்கு, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் சிறப்பு செயலாக்கப் பிரிவுகளுக்கு 90 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 15 ஜீப்புகள்;
சென்னை வட கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி, பண்ருட்டி, செஞ்சி, ஆம்பூர், இலுப்பூர், திருத்துறைப்பூண்டி, லால்குடி, அரவக்குறிச்சி, வால்பாறை ஆகிய பகுதி அலுவலகங்களுக்கு 56 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 10 ஜீப்புகள் என மொத்தம் ஒரு கோடியே 46 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 25 ஜீப்புகளை போக்குவரத்துத்துறை அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக  முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதற்கான விழா இன்று  நடைபெற்றது.