சென்னை:  இலங்கை விடுவித்த 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கும் பணியின்போது, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதும்போல மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறையின் நடவடிக்கையால்,   ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டனர். அவர்கள் அங்கிருந்து கடற்படையினர் மூலம், இன்று காலை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று காலை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர்.