ராமேஸ்வரம்:

கச்சத்தீவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கு கடலுக்கு சென்றனர். இவர்களில் தங்கச்சி
மடத்தை சேர்ந்த சர்புதீன் என்பவர் படகில் 4 மீனவர்கள் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது,
சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,
மீனவர்களை அங்கிருந்து சென்றுவிடும்படி எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி
அவர்களை தாக்கியதோடு மீன்பிடி வலைகளை அறுத்தும், பொருள்களை சேதப்படுத்தியும், படகில் இருந்த மீன்களை கடலில் வீசியும் உள்ளனர் .

கடலுக்குச் சென்ற அனைத்து படகுகளும் இன்றுகாலை கரை திரும்பியதும் தான் சர்புதீன் படகு சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது.

இதனிடையே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை படகுடன் இலங்கை
கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாகப்பட்டினம், ராமேசுவரம், தங்கச்சிமடம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று காலை அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.