சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் 100 என்ற பெயரில் திரையுலகம் சார்பில் இன்று விழா நடைபெறுகிறது. இதில்  முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி,  தமிழ்நாடு திரையுலகம் சார்பில் இன்று “கலைஞர் 100” விழா சென்னை கிண்டியில் உள்ள  எம்.சி.ஆர்.  கிரவுண்டில் நடைபெறுகிறது.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதி செய்த மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் விதமாக “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து,  சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 24ந்தேதி எம்.ஜி.ஆர், நினைவு தினம் என்பதால் அன்றைய தினம் கொண்டாட அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 6ந்தேதி நடைபெறும் என தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கலைஞர் 100 விழா ஜனவரி 6ஆம் தேதி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  அப்போது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்தால், மீண்டும் விழா தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 6ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று கலைஞர் 100 விழா நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் வருகை தரவுள்ளதால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கலைஞர் 100 விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராம நாராயணன், பொதுச்செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் அழைப்பிதழ் வழங்கினர்.

மேலும் இந்த விழாவில் திரையுலகம் சார்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.