சென்னை

ண்டிமடம் காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களைக் கொள்ளை அடித்தவர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டனைக்  குறைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பு  தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி செயல்பட்டு வந்தது. கடந்த 1997 ஆம் ஆண்டு அந்த அமைப்பினர், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அத்துடன் தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வீசி சென்றனர்.

க்யூ பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கில் 14 பேரை கைது செய்திருந்த நிலையில், விசாரணையின் போது 3 பேர் உயிரிழந்தனர். மீதி உள்ள 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.  தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 பேர் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன்பு இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழர் படையைச் சேர்ந்தவர்களுக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டார்.

அவர்கள் காவல்துறையினரைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்தைத் தாக்கவில்லை என்றாலும் கூட, துப்பாக்கி உள்ளிட்ட அரசு சொத்துகளைக் கொள்ளையடித்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.