சுவாதி
சுவாதி

சுவாதி கொலை குறித்து, பேஸ்புக்கில் தமிழச்சி என்பவர் தொடர்ந்து பரபரப்பு பதிவுகளை எழுதி வருவது அறிந்தத். இவரது இன்றைய பதிவில், “படுகொலை செய்யப்பட்டபோது சுவாதி கர்ப்பமாக இருந்தார் என்பது போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் கண்டுபிடிக்கப்பட்டது” என்று தனது பதிவில் தெரிவித்திருக்கிறார். “பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாண்ராமன் சுவாதி கர்ப்பாக இருந்ததை மறைமுகமாக எழுதி சில மணிநேரங்களில் அப்பதிவை நீக்கி விட்டார்” என்றும் தமிழச்சி பதிவிட்டிருக்கிறார்.
சுவாதி குறித்து தமிழச்சியின் இன்றைய பதிவு:
3 1
“சுவாதி படுகொலை செய்யப்படும் போது அவர் கர்ப்பமாக இருந்தார்” என்ற வாய் வழி தகவல்களை நம்பி பதிவு செய்யவில்லை. ஆனால் அவருடைய ‘போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்’ மூலமாக அவை உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை நீதிமன்ற விசாரணையில் காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்படும் போது உண்மைக்கு புறம்பான தகவல்களாகவே இருக்கும் என்கிறார் அந்த நபர்.
சுவாதி படுகொலை செய்வதற்கு காரணமான நபர்கள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த சில பா.ஜ.கட்சி உறுப்பினர்களும் இந்து பரிவாள அமைப்பினரில் சிலருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது.
சுவாதி பிலாலை திருமணம் செய்தது, கர்ப்பமானது, இஸ்லாமிய மதமாற்றத்திற்கு முயன்றது உள்ளீட்ட இந்த காரணங்களினாலே படுகொலை செய்யப்பட்டார். அக்கொலைக்கு பிலாலையே பொறுப்பாக்கி இந்து / இஸ்லாமிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்வதும் தான் அவர்களுடைய முக்கிய குறிக்கோள்.
அதனால்தான் சுவாதி கொல்லப்பட்ட மறுநாளே பிலால் கதையை பா.ஜ.கவினரும் இந்து பரிவாள அமைப்புகளும் ஆரம்பித்தன.
கல்யாண்ராமன் நீக்கியதாக தமிழச்சி குறிப்பிடும் பதிவு
கல்யாண்ராமன் நீக்கியதாக தமிழச்சி குறிப்பிடும் பதிவு

பா.ஜ.கவைச் சேர்ந்த கல்யாண்ராமன் சுவாதி கர்ப்பாக இருந்ததை மறைமுகமாக எழுதி சில மணிநேரங்களில் அப்பதிவை நீக்கி விட்டார். அதேப்போல் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஆதரவாக பேசிய பதிவையும் காணவில்லை.”