செங்கோட்டை:
ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. தென்காசி  இன்ஸ்பெக்டர்தான்  அவனது கழுத்தை அறுத்தார் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தந்ப ரமசிவன் ராம்குமார் சுவாதி இன்ஸ்பெக்டர் பால லமுருகன்
ராம்குமார் தந்தை பரமசிவன்           ராம்குமார்                            சுவாதி           இன்ஸ்பெக்டர் பாலமுருகன்

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு சம்பந்தமாக ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். தன்னை அழகில்லாதவன் என சுவாதி திட்டியதால் கொலை செய்ததாக ராம்குமார் கூறியதாக தகவல்கள் வந்தன.
இதையடுத்து ராம்குமாரை அவரது சொந்த ஊரில் போலீசார் பிடிக்க சென்றபோது, தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் ராம்குமார் கொலையில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக அவரது வக்கீல் கூறியிருந்தார். இந்த கொலை ஆணவக் கொலையாக இருக்குமோ என அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் வேளையில்,
ராம்குமார் தந்தை பரமசிவன் செங்கோட்டை போலீஸ் நிலையத்தில், தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சக போலீசார் துணையுடன் தனது மகனின் கழுத்தை பிளேடால் அறுத்ததாக அவர் புகார் மனுவில் கூறி உள்ளார்.
மனுவில், நான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் லைன்மேன் ஆக வேலை பார்க்கிறேன்.  எனது மகன் ராம்குமார் பி.இ. படித்துள்ளார். சில பாடங்களில் அரியர்ஸ் இருந்தது. அவற்றை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவதற்காக அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்தார். கடந்த 25-6-16 அன்று என்னிடம் பணம் வாங்குவதற்காக அவர் ஊருக்கு வந்தார். இந்நிலையில் கடந்த 1-7-16 அன்று நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் எனது வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.  கதவை திறந்து நான் வெளியே வந்த போது  டி சர்ட் அணிந்து 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.  தங்களை போலீஸ் என்று கூறிய அவர்கள் இது முத்துக்குமார் வீடா என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான் எங்கள் வீட்டில் முத்துக்குமார் என்ற பெயரில் யாரும் இல்லை என்று தெரிவித்தேன்.
அப்போது வீட்டின் பின் பகுதியில் இருந்து வந்த 2 போலீசார் என்னிடம்,  உனது மகன் கழுத்தை அறுத்துக் கொண்டான் என்று என்னிடம் கூறினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நானும், எனது மனைவி, மகள்களும் பின்பக்கம் சென்று பார்த்தோம். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் எனது மகன் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி மயங்கியவாறு இருந்தான். அவனது கழுத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்தது.
எனது மகனை ஒரு போலீஸ்காரர் பிடித்திருந்தார். அருகில் பிளேடு கிடந்தது. அந்த காவலரின் கையில் ரத்தம் இருந்தது.
நாங்கள் சத்தம் போட்டு அழ ஆரம்பித்ததும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் அங்கு திரண்டனர். உடனே தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கிருந்த காவலர்களிடம், ‘அவனை உடனே ஜீப்பில் ஏத்துங்க’ என்று கத்தினார். இதையடுத்து காவலர்கள் ராம்குமாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.  எனவே, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தான் எனது மகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.  கழுத்தை அறுத்து எனது மகனை கைது செய்து சென்றது முதல் எனது உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. எனவே, என்னால் புகார் கொடுக்க முடியவில்லை.
எனவே எனது வீட்டில் நுழைந்து எனது மகன் ராம்குமாரின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற  தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மீதும் அவருடன் வந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளது.