சென்னை

வுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி அவர் அளித்த ம்னு விசாரணை 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் காவல்துறையினரா யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்படும் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு,  ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.

கஞ்சா வழக்குக்காக மே. 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்,  மறுநாள் (மே.8) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

தற்போது இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றபோது  நீதிபதி செங்கமலச் செல்வனிடம் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.