நடிகர் சூர்யா நடிக்கவுள்ள 38வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

சூர்யாவின் 38வது படத்தை இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கவுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்திற்காக சூர்யா மற்றும் சுதா கொங்காரார அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.