பூண்டி

தொடர் மழை காரணமாகப் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி  உபரிநிர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரி சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று ஆகும். பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரைச் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஜமீன் கொரட்டூர் ஏரிகளுக்குத் திறந்து விடுவது வழக்கம்.

கடந்த சில  நாட்களாக கிருஷ்ணா நதிநீர் வரத்து இல்லை என்றாலு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.  பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. எனவே ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி நேற்று முன்தினம் வினாடிக்கு 40 கன அடி வீதம் மழைநீர் வந்ததால் மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ஏரிக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 190 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  எனவே ஏரியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. ஏரியின் உயரம் 35 அடியாகும். நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.77 அடியாக பதிவாகி 3.073 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.