செம்பரம்பாக்கம்

கனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது, 

சென்னை வானிலை ஆய்வு மையம் காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அறிவுறுத்தி உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் 19 கண் மதகில், 10-வது செட்டர் வழியாக 25 கன அடி உபரிநீர் நேற்று மாலை திறந்து விடப்பட்டது. தற்போது ஏரியின் நீர்மட்ட உயரம் 21.93 அடியும், மொத்த கொள்ளளவு 3,102 மில்லியன் கன அடி, நீர்வரத்து 36 கன அடியாக உள்ளது.

மேலும் மழையின் தாக்கம் அதிகரித்தால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள்

“செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியில் வைத்துக் கண்காணித்து எதிர்பார்த்தபடி மழை இல்லையென்றால் உபரிநீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்படும் ” 

என்று தெரிவித்தனர்.