ஜெயலலிதாவுடன் ஜெயப்பிரகாஷ்

இன்று, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். முன்னதாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பி.ஹெச். பாண்டியன், “ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்திருக்கக்கூடும்” என்று தெரிவித்தார். மேலும் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதாலும் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், அந்தணர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர், ராஜாளி சீ ஜெயபிரகாஷ், ஓ.பி.எஸ்ஸை தங்களது கழகம் ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர், “அம்மா (ஜெயலலிதா)வை கொன்ற  துரோகிககளுக்கு பாடம்புகட்ட   மாண்புமிகு ஓபி எஸ் அவர்களை ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.