சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இவருக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது.கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து விட்டு காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு ராதா பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரை கண்டித்ததாகவும் ஆனால் அதற்கு ராதா முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் நடிகை ராதா தொழிலதிபர் பைசூல், அதிமுக பிரமுகர் உள்ளிட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட உதவி ஆய்வாளர் துன்புறுத்துவதாக நடிகை ராதா புகார் அளித்துள்ளார் .