அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. சென்னை பார்க் ஹோட்டலில் இதற்கான விழா நடந்தது.

இந்தப் படத்துக்கு பார்டர் என பெயர் வைத்துள்ளனர். ஹோட்டலின் வெளிப்புறம் முழுவதும் தேசியகொடி வண்ணங்களால் நிறைந்திருக்க, அதில் பார்டர் என்று தமிழ், ஆங்கிலத்தில் ஒளிரும்படி செய்திருந்தனர்.

இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மே மாதம் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.