சென்னை

கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னை புறநகர ரயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்க உள்ளது.

.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில், பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொது விடுமுறை விடப்படுவதால் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதாவது சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.