புதுக்கோட்டை,

றவழியில் நடைபெற்று வந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சிலரை ஊடுறுவ வைத்து அதில் வன்முறையை தூண்டி விட்டு கலவரத்திற்கு வித்திட்டது திமுகதான் என்று எம். நடராஜன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவர்கள் அமைதி வழியில் நடத்தி வந்த போராட்டத்திற்குப் போன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மாணவர்கள் திருப்பி அனுப்பியதால் கோபமடைந்து திமுகவினர் வன்முறையைத் தூண்டினர் என்று கூறியுள்ளார் நடராஜன்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் புதுக்கோட்டையில் இன்று பரபரப்பு பேட்டி அளித்தார்.

புதுக்கோட்டையில் ஒரு திருமண வரவேற்பில் கலந்துகொண்ட நடராஜன் நிருபர்களிடம் கூறிய தாவது,

இந்தியாவுக்குள் நுழைய பீட்டாவுக்கு அனுமதி கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசுதான். அப்போது மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. தமிழகத்தை சேர்ந்த ஆ.ராசா சுற்றுசூழல் அமைச்சராக இருந்தபோதுதான் பீட்டாவுக்கு அனுமதி வழங்கினார்.

தமிழர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு பாரதியஜனதா அரசு,  சிறப்பு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், அந்த  சட்டத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் இல்லாததால் ஜல்லிகட்டு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்தாண்டு தமிழகத்தில்  ஜல்லிகட்டு நடத்துவதற்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தொடங்கி யது.

சென்னையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க 3 நாட்களுக்கு பிறகு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வந்தார். அரசியல் கட்சியினர் யாரும் வர வேண்டாம் என, அவரை மாணவர்கள்  திருப்பி அனுப்பிய பிறகு தான் திமுக தூண்டுதலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தில் ஒரு சிலர் ஊடுருவினர்.

கருணாநிதி ஸ்டாலினுடன் இருப்பவர்கள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்தனர். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. கலவரத்தை உருவாக்கி மாணவர்கள் போராட்டத்தை வைத்து,

தமிழக அரசுக்கு  அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தான் அறவழியில் போராடிய மாணவர்களின் உணர்வுகளை மதிக்காமல்,

மாணவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்த வேண்டும் என்ற நோக்கில் ரயில் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர்.

அறவழியில் நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறைக்கு வித்திட்டது திமுக தான் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மாணவர்களின் போராட்டததை திசை திருப்பி வன்முறையை தூண்டிய ஸ்டாலின் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் போலீசாரும் அத்துமீறியதாகவும் பல கருத்துக்கள் நிலவுகிறது.

எதுவாக இருப்பினும் வன்முறைக்கு வித்திட்டவர்கள் மீதும், விஷமிகள் மீதும் தவறு செய்த போலீசார் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள சட்டம் நிரந்தரமானது.

இதை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு நடராஜன் கூறினார்.