சென்னை: பேருந்துகளில் படிக்கட்டில் நின்ற,  ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது பேருந்து கண்டக்டர்கள், டிரைவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் சென்னை  மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் படிக்கட்ட பயணம் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டும், பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் ஏரி நின்றும், பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், ஒரே கூச்சலும், கும்மாளமுமாக பேருந்துகளில் பயணம் செய்வதால் வயதானவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணாக்கர்களின் ஒழுங்கங்கெட்ட செயல்களை தடுக்க வேண்டும் என கோரிக்கைகளை எழுந்துள்ளன.

இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில்  அறிவிப்பில்,  மாணவர்கள் பேருந்து பட்டிக்கட்டுகளில் நின்றுகொண்டு பயணம் செய்தாலோ,  உயிருக்கு பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பஸ்சை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்

. மாணவர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது போலீஸ் அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.

பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்.

என சென்னை மாநகர போக்குவரத்து கழக அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

போக்குவரத்து கழகத்தின் உத்தரவுபடி பேருந்து டிரைவரோ, கண்டக்டோரோ மாணவர்கள் மீது,  புகார் கொடுத்தால், பின்னால் அவர்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டிய போக்குவரத்துக்கழக அதிகாரிகள், முறையாக காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதைவிட்டுவிட்டு, டிரைவர்களையும், கண்டக்டர்களையும் பலிகடாவாக்க முயற்சிக்கிறார்கள் என கண்டக்டர்கள்  குமுறுகின்றனர்.