சேலம்: 17 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வருகின்ற 28ஆம் தேதி தமிழ்நாடு அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது 17 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி சேலத்தில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  கிராம வங்கி ஊரியர் சங்கப் பொதுச்செயலாளர் அறிவுடைநம்பி,  “தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொ ரோனா கால நிவாரண ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், கிராம வங்கி சேவையை வாடிக்கையாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில்  தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திட வேண்டும்,  வங்கிக்கு வரும்  மாற்றுத்திறனாளி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை வங்கி வளாகத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும். அதை   ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எங்களது கோரிக்கைகளை அரசு  நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 28ஆம் தேதி, தமிழ்நாடு அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.