மாநாடு வெற்றிக்குப் பிறகு சிம்பு பிசியாக இருக்கிறார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் முழுமூச்சாக நடித்து வரும் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி முதல் வாரத்தில் முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக்-குடன் இணைந்து ஒபே கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

மார்ச் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக சிம்பு தரப்பில் இருந்து செய்தி வெளியாகியிருக்கிறது.

‘பத்து தல’ படத்திற்குப் பிறகு ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.

‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களை ஐசரி கே கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.