சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தமது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறார்.

இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 15ஆம் தேதி கலைஞர் பிறந்த மண், திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்குகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.