திருவாரூர்:
திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து துவங்கினார்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் துவங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல் வேட்பாளராக திருவாரூர் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்த்து, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.