சென்னை:
ன்னை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த தொண்டர்களுக்கு ரூ.100 தாளை பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக தொண்டர்கள் வாழ்த்து பெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல் திருநாள் அன்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க திமுக தொண்டர்கள் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு வந்தனர்.அவர்களிடம் பொங்கல் வாழ்த்துக்களை பெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.100யை தொண்டர்களுக்கு பரிசாக வழங்கினார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்தபோது இதே போல திமுக தொண்டர்கள் அவருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து 100 ரூபாய் பரிசாக பெற்றுச்செல்வர். எனினும் அதனை யாரும் செலவு செய்யமாட்டார்கள். தனது தலைவரிடம் வாங்கிய பணம் என்பதால் நினைவாக தொண்டர்கள் வைத்திருப்பர். சில வீடுகளில் ப்ரேம் போட்டுகூட வைத்திருப்பார்கள். அந்த வகையில் கருணாநிதி பாணியில் தொண்டர்களுக்கு பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.