சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால்  அழைப்பு விடுத்த நிலையில், 7ந்தேதி காலை 9மணிக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு  அமைச்சரவை பதவி ஏற்பு விழா! தலைமைச்செயலாளர் அழைப்பு

இன்று காலை கவர்னரை சந்தித்து மு.க.ஸ்டாலின்  ஆட்சி அமைக்கும் உரிமைக்கோரி கடிதம் கொடுத்த நிலையில், கவர்னர் மாளிகையில் இருந்து, ஆட்சி அமைக்க வரும்படி கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த  கடிதத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநரின் தனிச்செயலாளர் அனந்தராவ் படேல் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து தமிழக தலைமைச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழா 2021ம் ஆண்டு மே திங்கள் 7ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும்.  தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன். 

பதவி ஏற்பு விழாவுக்கு ஒருவர் மட்டுமே அனுமதி என்றும், அழைப்பிதழோடு காலை 8.30 மணிக்கு இருக்கையில் அமர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.