சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திமுக அதிமுக, அமமுக கட்சித் தலைவர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் தொகுதியில் துணைமுதல்வர் ஒபிஎஸ் முன்னிலையிலும், கோவில்பட்டியில் அமமுக தலைவர்  டிடிவி தினகரனும் முன்னிலை வகிக்கின்றனர்.

தாராபுரம் தனி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

காலை 9.15 மணி நிலவரப்படி,  திமுக 75  தொகுதிகளிலும் அதிமுக 49 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும், அமமுக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.