சென்னை:

ட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

அவருடன் திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து போலீசார் திமுகவினரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதையறிந்த திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைக் கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு அருகே திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் பல இடங்களில்  திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.