சென்னை:

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.  தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர்  தொடர்ந்து கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்து வருவதும்                                                                                                                          வாடிக்கையாகியுள்ளது.

இந்தநிலையில் இன்று நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்த படகில் ரூ.20 கோடி மதிப்புள்ள ஹெராயினை கைப்பற்றியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது