சினிமா படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், பல ஒளிப்பதிவாளர்கள் கேமிராக்களை தயார் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

எப்போதோ எழுதி வைத்த வசன நோட்டுகளை தூசு தட்டி அடுத்த வாரம் ஷுட்டிங் செல்ல ஆயத்தமாகி விட்டார், அறிமுக இயக்குநர், நவீன் கணேஷ்.

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘ எக்கோ’’ என்ற மனோதத்துவ த்ரில்லர் கதையை கையில் எடுத்துள்ள நவீன் கணேஷ் தெரிவித்த தகவல் இது:

‘’ 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் உருவாக்கிய குறும்படத்தைத்தான் ‘எக்கோ’’ என்ற பெயரில், முழுநீளப்படமாக்க போகிறேன். இந்த படத்தில் நிறைய கேரக்டர்கள் கிடையாது.

இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல. இதனால் தான், ஏராளமான த்ரில்லர் கதைகளில் நடித்துள்ள ஸ்ரீகாந்த், இந்த கதையை கேட்டதும் உடனே கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் மூன்று வித்தியாசமான ஸ்ரீகாந்தை நீங்கள் பார்க்கலாம்.

நாயகியாக, வித்யா பிரதீப் நடிக்கிறார். ஆஷிஷ் வித்யார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்’’

-பா.பாரதி.