ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம்  பகுதி மீனவர்களை  இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை அடித்து நொறுக்குவதும், மீனவர்களை  அடிக்கடி கைது செய்வதும்  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  தனுஷ்கோடி மீன்பிடித்துக் கொண்டிருந்த  இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் பகைது செய்துள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன், மீனவர்களின்  விசைப்படகையும்  கைப்பற்றியது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு விசைப்படகுடன் ஆறு மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்றதால் சக மீனவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.