தனுஷ்கோடி:
லங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அல்லல்பட்டு வருகின்றனர். இதனால், அங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்கள் பலர் அண்டை நாடுகளில் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து இதுவரை 90க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.