விழுப்புரம்

பௌர்ணமி  கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இம்மாதம் பௌர்ணமியையொட்டி வருகிற 24 ஆம் தேதி  பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர்.

இந்த மாதம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாம லை-விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) விழுப்புரத்துக்குப் பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும்.

இதைத் தவிர விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 24-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06131) இரவு 10.45 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும்.  மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து 25-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06132) காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.  

இந்த ரயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.” 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.