சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும்  காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பதக்கங்களைத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதன்படி, அமரேஷ் புஜாரி, அமல்ராஜ், விமலா, நாவுக்கரசன், பிரேம் பிரசாத் ஆகிய  5 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கமும்,   காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பதக்கங்கள் 10 அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என்றும்,  நாளை நடக்கும் சுதந்திர தின கொடியேற்ற விழாவில் முதல்வர் பதக்கங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.