சென்னை: இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் குறை கேட்பு சிறப்பு மையம் திறக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால், இதுவரை கோவில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்ககவில்லை. இந்த நிலையில்,  இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தை (044-28339999) இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் 044-28339999 என்ற  எண்ணில் தொடர்புகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.