சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றுமுதல்  சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வணிக நிறுவனத்திற்கான கட்டண இணைப்பை பெற்றவர்கள் தவிர மற்றவர்கள், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் எழுந்துள்ளதாக புகார்கள் வந்தன..

இதைனைத்தொடர்ந்து, மின்வாரிய அலுவலகங்களில்,  இன்று முதல் (28ஆம் தேதி) டிசம்பர் 31 வரையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என  மின்சாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் , மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதர் எண் மற்றும் மின் இணைப்பு எண் மட்டும் கொண்டு சென்றாலே போதும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.