சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் இருந்து அவர் வீடியோ வெளியிட்டார்.

கடந்த 12ம் தேதியில் இருந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. அவர் குணம் பெற்று மீண்டு திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந் நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றும் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே போன்று வசந்தகுமார் எம்.பிக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது என்று கூறினார்.