பாடகர் எஸ்பி. பாலசுப்ர மணியம் கொரோனா தொற்று பாதிப்பால் பாதிக் கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவ்ர் உடல் நலம் பெற திரையுலகின ரும் ரசிகர்களும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதன்பிறகு எஸ்பிபி பற்றி நல்ல செய்திகளாக வந்துக்கொண் டிருக்கின்றன.


சில தினங்களுக்கு முன் எஸ்பிபி சரண் கூறும்போது.’ என் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். என் தந்தை ன் நுரையீரலில் முன்னேற்றம் இருப்ப க தெரிவித்தனர். தெரிகிறது. இது அவர் குணம் அடைவதற்கான முதல்படி. அவர் சில வார்த்தைகள் எழுதி காட்டி னார். டாக்டர்கள் கேட்ப ற்கு பதில் அளிக்கிறார். அவருக்காக பிரார்தனை செய்தவர்களுக்கு நன்றி’ என்றார்.
இந்த நிலையில் இன்று எஸ்பிபி சரண் வெளி யிட்டுள்ள வீடியா வில்,’அப்பா எஸ்பிபி உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது திங்கட் கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்க லாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.
எஸ்பிபி குணமடைந்து வீடு திரும்பும் தகவலை சரண் சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.