இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஷர்மிளா மந்த்ரே தனது ட்விட்டர் பதிவில்

“அனைவருக்கும் வணக்கம். எனக்கும், என் குடும்பத்தினர் சிலருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளே இருப்பதால் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவரின் அறிவுரைக்கேற்ப சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்”.

இவ்வாறு ஷர்மிளா மந்த்ரே தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நண்பருடன் காரில் வெளியே சென்றபோது பெங்களூருவில் விபத்தில் சிக்கினார் ஷர்மிளா மந்த்ரே. கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் அவர் காவல்துறையின் அனுமதியின்றி வெளியே சுற்றியது சர்ச்சையானது.