சென்னை

விரைவில் சென்னை மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில் சேவைகள் இணைக்கப்பட உள்ளன.

சி எம் டி ஏ மின்சார ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில்,சேவையை பறக்கும் ரயில் சேவையுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசுக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் இடையே விரைவில் இப்பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு டெண்டர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வரைவு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது.

இதன்படி மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரி பாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் உள்ள 20,44,400 ச.மீ இடத்தில் உணவகங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.