டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடல்நலம் பாதிப்பு மற்றும் சுவாச நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வரும்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கிய சோனியா காந்தி  அதற்கான தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.அவதிப்பட்டு வருகிறாகாரணமாக, , தற்போது அமைதியான முறையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், ராகுலின் யாத்திரையிலும் அவ்வப்போது பங்கேற்று உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சோனியா காந்தி, இன்று  டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்துள்ளது வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.