சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சுஷில்ஹரி பள்ளி தாளாளர் தந்த வழக்கில்சிவசங்கர் பாபாவின் காவல் மேலும் 15 நாட்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது காவல் நவம்பர் 16ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நிதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர்மீது 43 போக்கோ வழக்கு உள்பட 5 வழக்குகளை காவல்துறை தொடர்ந்து, அவரை சிறையில் தள்ளியுள்ளது.

இதையடுத்து, அவர் சார்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 2 வழக்குகளில் ஜாமின் பெறப்பட்டுள்ள நிலையில், 3வது வழக்கின் விசாரணைக்காக காவல்துறையினர்,  சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று  ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில்,சிவசங்கர் பாபாவின் காவலை நவம்பர் 16 வரை  நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.