பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கவலையில் இருந்தாலும் அது குறித்து மீம்ஸ் போட்டும் சந்தோஷப்படுகிறார்கள் நெட்டிசன்கள்.

தற்போதைய சூழலில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெட்ரோல் படுத்தும் பாடால் சைக்கிள் திருட்டு அதிகரிக்கும் என்று கிண்டல் செய்து பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட ஒரு போஸ்ட் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கவே இணையத்தில் வைரலாகி வருகிறது .

இதை பார்த்த இணையவாசிகளோ, சிவகார்த்திகேயன் ஒரு தீர்க்கதரிசி. 9 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து விட்டார் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.