தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக நுழைந்து பின்னர் தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆனவர் நடிகர் ரோபோ ஷங்கர்.

அவரின் மகள் இந்திரஜா அட்லி இயக்கித்தில் விஜய் நடித்த பிகில் படம் மூலம் நடிகையானார்.

இந்நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவக திறப்பு விழாவில் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அவர் தனுஷ் பற்றி பெருமையாக பேசினார்.

தனுஷ் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை, வாழ்க்கையே கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் தனுஷ் தான். கொரோனா நேரத்தில் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார்.

ஒரு பர்சனல் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் தான் தனுஷுக்கு போன் செய்து பேசினேன். அப்பொழுது அவர் டெல்லிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ஊருக்கு செல்லும் நேரத்தில் அவரிடம் உதவி கேட்கலாமா, வேண்டாமா என்று யோசித்து, தயங்கித் தயங்கி தான் கேட்டேன்.

எனக்கு குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார் தனுஷ். நான் என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட ஆரம்ப புள்ளியை பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியது தனுஷ் தான் என்றார்.

https://twitter.com/Thamarai_DFC/status/1363483524045565954