சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குறித்து விவாதிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  நடைபெற உள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு குறித்து, இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டம்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாகவும், திமுக ஆட்சியில் அதிமுக திட்டங்கள் முடக்கம் பற்றியும் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. முன்னதாக, அதிமுக அலவலகம் வெளியே, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்க கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். ஒற்றை தலைமை வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி தலைமை வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பி வந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய என்ன என்பது குறித்து முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களை சந்தித்து விளக்கினார். அப்போது,  பேட்டி அளித்தர். அப்போது, அதிமுக “பொதுக்குழுவுக்கு முன்பாக தற்போது நடைபெற்ற  இன்றைய மாவட்டச் செயலாளர்கள்  கூட்டத்தில், அதிமுகவுக்கு  ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது  குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெரும்பான்மையான தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்திக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த விவாதம் ஒரு ஆரோக்கியமான முறையில் இருந்தது. கட்சியைப் பொருத்தவரை, அதிமுகவைப் பொருத்தவரை, அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்ற முறையில், ஒற்றைத் தலைமை அவசியம் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆனால், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பது குறித்து தற்போது விவாதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கட்சி முடிவு செய்யும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், இரட்டைத் தலைமை என்ற நிலையில் இருந்து பொதுக்குழுவுக்கு முன்பாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் தலைமை தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டது.  காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அன்றைக்கு இருந்த நிலை வேறு, இன்றைக்கு இருக்கின்ற நிலை வேறு. இ

ன்று ஒட்டுமொத்தமாக, அதிமுக தொண்டர்களும் சரி, கட்சியின் நிர்வாகிகளும் சரி, பொதுவாகவே எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்பதுதான். காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் இன்று அதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.