கந்தசஷ்டி கவச மகிமை

தினமும்கந்தசஷ்டி கவசம்_படித்தால் :

🌺🌿சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

🌺🌿 சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.

🌺🌿.வீட்டில் பீடை, தரித்திரம், செய்வினை அடியோடு அழிந்துவிடும்.

🌺🌿லட்சுமி கடாட்சம், குழந்தை பாக்கியம், மன நிம்மதி ஏற்படும்.

🌺🌿 கந்த ஷஷ்டி கவசம் படிக்கும் நபருக்குப் புகழ், மதிப்பு கூடும். முக வசீகரம் ஏற்படும்.

🌺🌿 செவ்வாய்க் கிழமை மூன்று முறை கந்த சஷ்டியைப் படித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

🌺🌿 சஷ்டி தினத்தில் முருகனுக்கு விரதம் இருந்து மூன்று முறை சஷ்டி கவசம் படித்து ஆலயம் சென்று முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் நடக்கவே இயலாத காரியங்களும் நடக்கும்.

🌺🌿கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர்களுக்கு இந்த விரதம் ஓர் சவாலாக இருக்கும்.

🌺🌿 கந்த சஷ்டி கவசம் என்பது சாதாரண பாடல் அல்ல சர்வ சக்திவாய்ந்த மந்திரம்.

🌺🌿 முற்கால முனிவர்களும் சித்தர்களும் காட்டில் வசிக்கும் போது தீய சக்திகளிடமிருந்து தப்பிக்க சிவ மந்திரங்களையும் சஷ்டி கவசத்தையும் ஜெபித்து வந்தனர்..

🌺🌿எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.