‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அனைவருமே தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் சித்தார்த் பாதிக்கப்பட்டால் மட்டுமே குரல் கொடுப்பது துணிச்சல் அல்ல என்று சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

மீ டூ இயக்கத்தைப் பற்றி எனது துறையில் அனைவருமே மவுனமாக இருந்த போது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்ப ஒரு சக்தி வாய்ந்த பெண்ணின் கோபத்தால் மட்டுமே முடியும் என்ற உண்மை எனக்கு வருத்தத்தை தந்தது.

நீங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தான் அநியாயத்துக்காக குரல் கொடுப்பீர்கள் என்றால் அதுக்கு பேர் துணிச்சலே இல்லை. மீடூ பற்றி பேசாமல் இருந்தவர்கள் அனைவருமே குற்றவாளிகள்தான்.

பெண்களின் மனக் குமுறலுக்கு எதிராக மவுனம் காத்த பெண்கள் இதனை கவனிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்