அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி குவிந்து வருவதாக தெரிவித்துள்ள அறக்கட்டளை நிர்வாகம், இதுவரை ரூ.  ரூ.1,511 கோடி நன்கொடையாக நிதி வசூலாகி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான முறையில் 3 ஆண்டு களுக்குள் ராமர் கோவில் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜையும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி  பிரதமரால் நடைபெற்றது.  இதற்கான பணிகளை ராமர்கோவில் கட்ட   அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா  அறக்கட்டளை மூலம் நடைபெற்று வருகின்றன.

ராமர்கோவில் கட்ட உலகம் முழுவதும் இருந்து நிதி குவிந்து வருகிறது. அதன்படி,   ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா  அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பொது மக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள,  அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, , “மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். 492 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் மீண்டும் மிகப்பெரிய தர்மத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,511 கோடி நன்கொடையாக அறக்கட்டளை திரட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.