‘ஆக்‌ஷன்’ படத்தை தொடர்ந்து ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா நடித்து வருகிறார்கள்.

ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படம் ‘இரும்புத்திரை 2’ என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் வேறொரு தலைப்பைத் தேர்வு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளனர்.