சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர முடியாது என்று மோடி அறிவித்ததை தொடர்ந்து இளைஞர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் வணிகர்கள் அமைப்புகள் நாளை (வெள்ளிக் கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை  அடைத்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது,

ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக நாளை  20-ந் தேதி (வெள்ளிக் கிழமை) தமிழகம் முழுவதிலும் கடைகளை அடைக்க இருக்கிறோம்.

மேலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களையும் வணிகர்கள் நடத்த இருக்கிறார்கள்.   தமிழகம் முழுவதிலும் 40 லட்சம் கடைகள் வெள்ளிக்கிழமை (நாளை) அடைக்கப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.